2012-11-17 17:09:40

அகில உலக நலப்பணியாளர் மாநாட்டின் இறுதித் திருப்பலியில் பேராயர் Zimowskiன் மறையுரை


நவ.17,2012. நம்பிக்கை ஆண்டில் நலப்பணியில் ஈடுபட்டிருப்போர் இணைந்து வந்திருப்பது பொருத்தமான ஒரு முயற்சி என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார்.
நலம் மற்றும் மேய்ப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Zygmunt Zimowski, உரோம் நகரில் கடந்த மூன்று நாட்களாக நிகழ்ந்த ஓர் அகில உலக நலப்பணியாளர் மாநாட்டின் இறுதித் திருப்பலியை புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில், இச்சனிக்கிழமை காலை நிறைவேற்றி, மறையுரை வழங்கியபோது, இவ்வாறு கூறினார்.
இச்சனிக்கிழமையன்று திருஅவையால் சிறப்பிக்கப்படும் ஹங்கேரி நாட்டின் புனித எலிசபெத் அவர்கள் தன வாழ்வின் பெரும்பகுதியைப் பிரரன்புப் பணிக்கென அர்ப்பணித்ததை, பேராயர் Zimowski தன் மறையுரையில் சிறப்பாகச் சுட்டிக் காட்டினார்.
உலகின் 65 நாடுகளிலிருந்து இம்மாநாட்டில் கலந்து கொண்ட 650க்கும் மேற்பட்ட அங்கத்தினர்கள் கடன்க்ஹா மூன்று நாட்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்குத் தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார் பேராயர் Zimowski.








All the contents on this site are copyrighted ©.