2012-11-15 15:59:29

நாசரேத் இயேசு என்ற தலைப்பில் திருத்தந்தை எழுதியுள்ள மூன்றாம் பகுதி நவம்பர் 20 வெளியிடப்படும்


நவ.15,2012. ‘நாசரேத் இயேசு’ என்ற தலைப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், ஜோசப் இராட்சிங்கர் என்ற தன் இயற்பெயருடன் எழுதியுள்ள நூல்கள் வரிசையின் மூன்றாம் பகுதி நவம்பர் 20, வருகிற செவ்வாயன்று வெளியிடப்படும் என்று வத்திக்கான் பதிப்பகம் அறிவித்துள்ளது.
இயேசுவின் வாழ்க்கையை விவரித்து திருத்தந்தை எழுதியுள்ள இம்மூன்றாம் பகுதி, "நாசரேத் இயேசு: குழந்தைப்பருவ நிகழ்வுகளின் விளக்கங்கள்" என்ற தலைப்புடன் வெளியிடப்படும் என்றும், இந்நூலின் ஆங்கில மொழிபெயர்ப்பு விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலாச்சாரத் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Gianfranco Ravasi, இந்நூலை நவம்பர் 20ம் தேதி வெளியிடுவார் என்றும், திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi இவ்வெளியீட்டு விழாவை முன்னின்று நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.