மும்பை சேரி மக்களிடையே பணியாற்றிய சவானுக்கு அனைத்துலக கல்வி விருது
நவ.13,2012. இந்தியாவின் மும்பை சேரிப்பகுதியில் வாழும் பலஇலட்சக்கணக்கானகுழந்தைகளுக்குக்
கல்விப்பணி ஆற்றியதற்கெனமாதவ் சவான் என்பவருக்கு அனைத்துலகWISE கல்வி விருது வழங்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டுள்ளது. கல்விக்கானநொபெல்
விருது எனவும் அழைக்கப்படும் இவ்விருதினைப் பெறும் சவான், மும்பை சேரிப்பகுதியில் கல்வியை
ஊக்குவிக்க தொடர்ந்து பல ஆண்டுகளாக உழைத்து வருகிறார். கத்தார் தலைநகர் டோஹாவில் இடம்பெற்ற
அனைத்துலகக் கல்விக் கருத்தரங்கின்போது இச்செவ்வாயன்று சவானின் பெயர் இவ்விருதிற்கென
அறிவிக்கப்பட்டது. அடிப்படை துவக்கக் கல்வியைப்பெற வசதியின்றி இருக்கும் உலகின் 6
கோடியே 10 இலட்சம் சிறார்களிடையே கல்வியை ஊக்குவிப்பவர்களுக்கென உடுவாக்கப்பட்ட WISE
கல்வி விருது, ஐந்து இலட்சம் டாலர்கள் பரிசுத்தொகையை உள்ளடக்கியது. அமெரிக்க ஐக்கிய
நாட்டில் கல்வி கற்று இந்தியா திரும்பிய சவான், 1980களில் மும்பை சேரிமக்களிடையே தன்
கல்விப்பணியைத் துவக்கினார்.