விண்ணிலும், மண்ணிலும் வண்ணக் கோலமிடும் பட்டாசே, மத்தாப்பே, உங்களிடம் பற்றியெரியும்
சில கேள்விகள்...
யாம் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்று காற்று மண்டலத்தை
கந்தகமாக்குவது நியாயமா? கடன்பட்டு, உடன்பட்டு தீபத் திருவிழா கொண்டாட்டத்தில் உங்கள்
பெயர் சொல்லி, காசைக் கரியாக்குவது நியாயமா?
கரியான பட்டாசே, மத்தாப்பே உங்களை
உருவாக்கியதால் கரியாகிப்போனக் குழந்தைகளின் சுவாசப் பைகளில் நீங்கள் கந்தகத்தை
ஊட்டுவது நியாயமா?
தீபாவளித் திருநாளும் குழந்தைகள் நாளும் ஒன்றையொன்று
தொடர்வதால்... உள்ளத்தில் வெடிக்கும் உறுத்தலான கேள்விகள்...