2012-11-12 17:14:30

ஷில்லாங் திருநற்கருணை ஊர்வலத்தில் பல ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்


நவ.12,2012. மெகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் இடம்பெற்ற திருநற்கருணை மாநாட்டு ஊர்வலத்தில் வடகிழக்கு இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலிருந்து பல ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர்கள் கலந்துகொண்டனர்.
ஷில்லாங் பேராயர் தோமினிக் ஜாலாவின் தலைமையில் இடம்பெற்ற இந்த திருநற்கருணை ஊர்வலத்தில் எண்ணற்ற சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொண்டனர்.
புதுநன்மை வாங்க தங்களைத் தயாரித்து வந்துள்ள சிறுவர்களும் சிறுமிகளும் விண்ணகத் தூதர்கள் போல் வெள்ளை உடை அணிந்து இவ்வூர்வலத்தின்போது நடனமாடிக் கொண்டேச் சென்றனர்.
மெகாலய முதல் அமைச்சர் முகுல் சங்மா, மற்றும் மாநில ஆளுனர் இரஞ்சித் சேகர் மூசாஹரி ஆகியோர் இக்கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக்க் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.