நவ.12,2012. மியான்மார் அரசியல் தலைவரான Aung San Suu Kyi மிகவும் பணிவான ஒரு பெண் என்றும்,
கற்பனைத் திறன்மிக்க எழுத்தாற்றல் பெற்றவர் என்றும் அவரது இளமைக்காலத் தோழியான Malavika
Karlekar கூறினார். நவம்பர் 13 இச்செவ்வாய் முதல் வருகிற ஞாயிறு முடிய இந்தியாவில்
சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் Suu Kyiயைக் குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய Karlekar
இவ்வாறு கூறினார். இந்திய காங்கிரஸ் கட்சித்தலைவர் Sonia Gandhi விடுத்துள்ள அழைப்பின்
பேரில் இந்தியாவில் ஆறுநாட்கள் பயணம் மேற்கொள்ளும் Suu Kyi, நவம்பர் 14, இப்புதனன்று
கொண்டாடப்படும் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாளன்று, நேரு நினைவுச் சொற்பொழிவை ஆற்றுவார்
என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலக அமைதிக்கான நொபெல் விருதினைப் பெற்றுள்ள Suu Kyiன்
இந்தியப் பயணத்தின்போது, டில்லியில் அவர் பயின்ற Lady Shri Ram கல்லூரி நிர்வாகத்தினரால்
கௌரவிக்கப்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் அவர் பயில்வதற்கு
முன், டில்லியில் உள்ள இயேசு மரியா கான்வென்ட் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.