கேரளாவில் இளையோர் ஆண்டு கொண்டட்டாங்கள் துவக்கப்பட்டுள்ளன
நவ.12,2012. திரு அவையில் துவக்கப்பட்டுள்ள 'நம்பிக்கை ஆண்டு' கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக
கேரள கத்தோலிக்க இளையோருக்கென ஓராண்டு திட்டம் ஒன்றைத் துவக்கியுள்ளது கேரள ஆயர்களின்
இளைஞர்களுக்கான அவை. இளைஞர் ஆண்டு கொண்டாட்டங்களைத் துவக்கி வைத்த ஆயர் Joseph Pandarasserril
உரைக்கையில், கிறிஸ்தவத்திலும் விசுவாசத்திலும் தங்கள் வாழ்க்கைமுறையை அமைத்துள்ள இளையோர்,
சமூகத்தை மேம்படுத்தவும், தாங்கள் வாழும் சமூகத்தில் விசுவாசத்தின் தூதுவர்களாகச் செயல்படவும்
மாறவேண்டும் என அழைப்புவிடுத்தார். கேரள ஆயர்கள் துவக்கியுள்ள இளையோர் ஆண்டு கொண்டாட்டங்களின்
ஒரு பகுதியாக பங்குதளங்களில் பாடவகுப்புகள், இளைய தலைவர்களின் கூட்டம், கருத்தரங்குகள்
என பல்வேறு திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.