2012-11-12 15:50:52

கவிதைக் கனவுகள் - படிப்பும் உழைப்பும்!


படிப்பு தேவை-அதோடு
உழைப்பும் தேவை-முன்னேற
படிப்புத் தேவை அதோடு
உழைப்பும் தேவை!
உண்மை தெரியும்
உலகம் தெரியும்
படிப்பாலே-நம்
உடலும் வளரும்
தொழிலும் வளரும்
உழைப்பாலே-எதற்கும் படி

பாடுபட்டதால் உயர்ந்தநாடுகள்
பலப்பல உண்டு-மன
பக்குவம் கொண்டு
மக்கள் முன்னேறக்
காரணம் ரெண்டு-அதுதான் படி

வீரத்தலைவன் நெப்போலியனும்
வீடுகட்டும் தொழிலாளி!
இரஷ்யத் தலைவன் மார்சல் ஸ்டாலினும்
செருப்புத் தைக்கும் தொழிலாளி!
அறிவியல் மேதை ஜி.டி.நாயுடும்
கார் ஓட்டும் தொழிலாளி!
விண்ணொளிக்கதிர் விவரம் கண்ட
சர் சி.வி.ராமனும் தொழிலாளி!-எதற்கும் படி

மக்கள்தொகை மிகுந்தாலும்
பசித்துயர் மலிந்தாலும்
பணத்தொகை மிகுந்தோர்-மேலும்
பணம் சேர்க்க முயல்வதாலும்
உழைத்தால்தான் பற்றாக்குறையை
ஒழிக்க முடியும்-மக்கள்
ஓய்ந்திருந்தால் நாட்டின் நிலைமை
மோசமாக முடியும்-எதற்கும் படி








All the contents on this site are copyrighted ©.