லெபனான் நாட்டின் Hezbollah அமைப்புப் பிரதிநிதிகளுடன் Maronite ரீதி முதுபெரும் தலைவர்
சந்திப்பு
நவ.10,2012. லெபனான் நாட்டின் உள்நாட்டுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில்
அந்நாட்டின் Hezbollah அமைப்புப் பிரதிநிதிகளைச் சந்தித்து, பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டார்
லெபனான் Maronite ரீதி முதுபெரும் தலைவர் Beshara al-Rahi. பேராயர் Al-Rahi கர்தினாலாக
திருத்தந்தையால் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக Hezbollah பிரதிநிதிகள்
பேராயரைச் சந்தித்தபோது, நாட்டின் இன்றைய நிலைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. லெபனான்
நாட்டில் புதிய தேர்தல் சட்டங்கள் புகுத்தவேண்டியதன் அவசியம், நாட்டின் வளர்ச்சியை தேக்கமடைய
வைத்திருக்கும் அரசியல் நெருக்கடிகளிலிருந்து வெளிவரும் வழிமுறைகள் போன்றவை குறித்து
இருதரப்பினரும் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே,
எதிர்கட்சிக்கும், லெபனான் நாட்டின் கிறிஸ்தவ அரசியல் தலைவர்களுக்கும் இடையே நாட்டின்
நெருக்கடி நிலை குறித்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.