2012-11-10 16:45:47

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு உதவி செய்ய தீர்மானம்


நவ.10,2012. இலங்கையில் போரினால் இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு உதவிகளை வழங்கும் நோக்கில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு ஒன்றை நிறுவியுள்ளனர்.
2009ம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த போரினை அடுத்து, புலம்பெயர்ந்தோர் முகாமில் வைக்கப்பட்டு, தற்போது மீள்குடியமர்த்தப்பட்டு வரும் தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் மலேசிய நாடாளுமன்றக் கூட்டமைப்பு அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அதன் தலைவர் டத்தோ ஜொஷாரி அப்துல் தெரிவித்தார்.
இந்த நாடாளுமன்றக் கூட்டமைப்புக்குச் செயலாளராக தெலுக் இந்தான் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகரன் மாரிமுத்து செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது







All the contents on this site are copyrighted ©.