இஞ்ஞாயிறை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறாக' சிறப்பிக்கிறது இலங்கை திருஅவை
நவ.10,2012. கருக்கலைப்பை அனுமதிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்
வகையில் இம்மாதம் 11ம் தேதி, இஞ்ஞாயிறை 'பிறப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளின் ஞாயிறாக'
சிறப்பிக்கிறது இலங்கை திருஅவை. இஞ்ஞாயிறின் தொடர்நடவடிக்கையாக செபக்கூட்டங்களும்,
கருக்கலைப்பு குறித்தக் கருத்தரங்குகளும் ஏற்பாடு செய்யப்படவேண்டும் என இளைஞர்கள், குடும்பங்கள்,
மருத்துவர்கள் மற்றும் மறைமாவட்டங்களின் அனைத்து விசுவாசிகளையும் விண்ணப்பிக்க உள்ளதாகவும்
அறிவித்துள்ளனர் ஆயர்கள். கணவனின்றி குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் பெண்களுக்கும்,
ஏழ்மையால் கருக்கலைப்பு ஆய்வுகளுக்கு உள்ளாகும் பெண்களுக்கும் என ஒவ்வொரு பங்குதளத்திலும்
நிதி திரட்டப்பட்டு, உதவிகள் வழங்கப்படும் எனவும் இலங்கை திருஅவை அறிவித்துள்ளது.