2012-11-08 15:59:12

உரோம் நகரில் நடைபெறவிருக்கும் கடல் பயணிகளுக்கான 23வது அகில உலக கூட்டம்


நவ.08,2012. கடல் பயணிகளுக்குத் தேவைப்படும் ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட இந்த நம்பிக்கை ஆண்டு நம்மைச் சிறப்பான வகையில் அழைக்கிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இம்மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி முடிய உரோம் நகரில் நடைபெறவிருக்கும் கடல் பயணிகளுக்கான 23வது அகில உலக கூட்டத்தைக் குறித்து, இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய பயணிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் திருப்பீட அவையின் தலைவர் கர்தினால் Antonio Maria Veglio இவ்வாறு கூறினார்.
கடல்பயணிகள் மேய்ப்புப்பணி உருவானதன் வரலாற்றைக் குறித்துப் பேசிய கர்தினால் Veglio, முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின்போது இந்த மேய்ப்புப்பணியின் முக்கியத்துவம் உணரப்பட்டது என்பதையும் எடுத்துரைத்தார்.
இம்மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி முடிய நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளும் 71 நாடுகளைச் சேர்ந்த 400க்கும் அதிகமான உறுப்பினர்களை, இம்மாநாட்டின் இறுதியில் திருத்தந்தை சந்திப்பார் என்றும் நிருபர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.








All the contents on this site are copyrighted ©.