2012-11-07 16:12:35

பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் முதுபெரும் தலைவரின் மறைவையொட்டி, திருத்தந்தை அனுப்பியுள்ள அனுதாபத் தந்தி


நவ.07,2012. பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் தலைவராகப் பணியாற்றி, இப்புதனன்று இறையடி சேர்ந்த முதுபெரும் தலைவர் Maxim அவர்களின் மறைவையொட்டி, அனுதாபத் தந்தியைத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அனுப்பியுள்ளார்.
பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் தற்போதையத் தலைவராகப் பொறுபேற்றுள்ள Grigorij di Veliko Trnovo அவர்களுக்கு அனுப்பியுள்ள இத்தந்தியில், அனைத்து ஆயர்கள், குருக்கள், பொதுநிலையினர் அனைவருக்கும் தன் செபங்களையும் அனுதாபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
அருளாளர் இரண்டாம் ஜான்பால் பல்கேரியா நாட்டுக்கு 2002ம் ஆண்டு மேய்ப்புப்பணித் திருப்பயணம் மேற்கொண்டபோது, முதுபெரும் தலைவர் Maxim அவரை அன்போடு வரவேற்று உபசரித்ததைத் திருத்தந்தை தன் அனுதாபச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முதுபெரும் தலைவர் Maxim, கடந்த 41 ஆண்டுகள் பல்கேரிய ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைவராகப் பணியாற்றிவர். இவர் கடந்த அக்டோபர் மாதம் 28ம் தேதி தனது 98வது பிறந்தநாளைக் கொண்டாடினார்.








All the contents on this site are copyrighted ©.