2012-11-05 15:43:32

வெனெசுவேலா நாட்டில் அரசியல் கைதிகள் நடுநிலையுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் - கர்தினால் Savino


நவ.05,2012. வெனெசுவேலா நாட்டில் அரசியல் காரணங்களுக்காகச் சிறைபடுத்தப்பட்டுள்லோர் சார்ந்த வழக்குகள் முற்சார்பு எண்ணங்கள் இன்றி, நடுநிலையுடன் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று Caracas பேராயர் கர்தினால் Jorge Urosa Savino, கூறியுள்ளார்.
திருத்தந்தை அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டு துவக்கத் திருப்பலியை வெனெசுவேலா தலைநகரில் உள்ள பேராலயத்தில் இச்சனிக்கிழமையன்று நிறைவேற்றிய கர்தினால் Savino, தன் மறையுரையில் இவ்வாறு கூறினார்.
பொது மன்னிப்பைக் கோரும் அனைத்துலக Amnesty அமைப்புடன் இணைந்து, அரசியல் கைதிகளுக்காக தானும் அரசிடம் விண்ணப்பம் செய்வதாக கர்தினால் கூறினார்.
திருத்தந்தை அறிவித்திருக்கும் நம்பிக்கை ஆண்டின் காலத்தில் ven நாட்டில் அண்மைக் காலங்களில் கொலைக் குற்றங்கள் கூடுதலாகி வருவதற்குத் தன் ஆழ்ந்த வருத்தத்தையும் Caracas பேராயர் கர்தினால் Savino தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.