2012-11-05 15:40:54

நீதிக்கான ஏக்கமே ஆசிய மக்களிடம் மிகப்பெரும் ஒன்றாக உள்ளது


நவ.05,2012. நீதிக்கான ஏக்கமே ஆசிய மக்களிடம் மிகப்பெரும் ஒன்றாக உள்ளது என இந்தியாவில் மாணவர்களுக்காக உழைக்கும் கிறிஸ்தவ இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது.
பெங்களூருவில் இடம்பெற்ற மூன்று நாள் தேசிய கருத்தரங்கின் இறுதியில் செய்தி வெளியிட்ட இந்திய கிறிஸ்தவ மாணவர் இயக்கம், மாணவர்களின் அர்ப்பணம் ஒவ்வொன்றும் வாழ்வு, நீதி மற்றும் அமைதியின் கடவுளை வெளிப்படுத்தும் இயேசுவின் படிப்பினைகளைச் சுற்றி அமையவேண்டும் என்ற உறுதிப்பாட்டை அதில் தெரிவித்துள்ளது.
அநீதி எந்த வடிவத்தில் இருந்தாலும் அது வாழ்வின் கடவுளுக்கு எதிராகச் செல்வதேயாகும் என இக்கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவர்கள் தெரிவித்தனர். கிறிஸ்தவ மாணவர் இயக்கம் தங்கள் பணிகளை கிறிஸ்தவர்களூக்கு என மட்டும் சுருக்கிக் கொள்ளாமல் அனைத்து மதத்தினருக்கும் சேவையாற்றுவதாக இருக்கவேண்ண்டும் எனவும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டோர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.








All the contents on this site are copyrighted ©.