2012-11-03 15:36:59

பங்களாதேஷ் திருஅவைக் கொண்டாட்டங்களுக்கான திருத்தந்தையின் சிறப்புப் பிரதிநிதி அறிவிப்பு


நவ.03, 2012. பங்களாதேசின் டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125வது ஆண்டுவிழாவில் கலந்துகொள்வதற்கான தன் பிரதிநிதியாக கர்தினால் Cormac Murphy-O’Connorஐ நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
பங்களாதேசில் நற்செய்தி அறிவிக்கப்பட்டதன் 400ம் ஆண்டு மற்றும் டாக்கா உயர்மறைமாவட்டம் உருவாக்கப்பட்டதன் 125வது ஆண்டு ஆகியவைகளை இணைத்து இம்மாதம் 9 மற்றும் 10 தேதிகளில் பங்களாதேஷ் திருஅவை சிறப்பிக்கும் கொண்டாட்டங்களில் திருத்தந்தையின் பிரதிநிதியாகக் கலந்துகொள்கிறார் Westminsterன் முன்னாள் பேராயர் கர்தினால் O’Connor.
பங்களாதேஷ் திருஅவையின் இக்கொண்டாட்டங்களுக்கென திருத்தந்தை வழங்கும் சிறப்புச் செய்தியையும் எடுத்துச்செல்வார் கர்தினால்.







All the contents on this site are copyrighted ©.