அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களை பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க உத்தரவு
நவ.03, 2012. குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள் உள்ளிட்ட, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்,
19 வகையான பொருட்களை, அதன் சுகாதாரம் கெட்டுவிடாமல், தரமான பாக்கெட்டுகளில் தான் இனி
விற்பனை செய்யவேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட சில உணவுப்
பொருட்கள், குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும்போது, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள்,
தங்களின் விருப்பத்துக்கு ஏற்ப, வெவ்வேறு விதமான பாக்கெட்டுகளில் விற்பனை செய்வதால்,
அளவு வேறுபாடு, சுகாதாரம் போன்ற பிரச்சனைகள் எழுவதைக் கட்டுப்படுத்தும் வகையில், இது
தொடர்பான சட்ட விதிகளில், கடந்த ஆண்டு திருத்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன்படி,
குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், பிஸ்கட், ரொட்டி, வெண்ணெய், தானியங்கள் மற்றும் பருப்பு
வகைகள், காபித்தூள், தேயிலை, சமையல் எண்ணெய், பால்பவுடர், சலவைத்தூள், அரிசி மாவு, கோதுமை,
மைதா, ரவை, உப்பு, சோப்புகள், காஸ் நிரம்பிய குளிர்பானங்கள், குடிநீர், சிமென்ட் பைகள்,
பெயின்ட் உள்ளிட்ட 19 விதமான பொருட்கள், இனிமேல், நிலையான, தரமான பாக்கெட்டுகளில் அடைத்துதான்,
விற்பனை செய்யவேண்டும் என்ற உத்தரவு, இம்மாதம் முதல் தேதியிலிருந்து அமலுக்கு வந்துள்ளது.