நவ.03, 2012. அன்னை தெரேசாவைப் பற்றிய ஒருவாரகலைக்கண்காட்சி இந்தியதலைநகர் புதுடெல்லியில்
துவக்கப்பட்டுள்ளது. திரப்படங்களைத் திரையிடுவதையும் உள்ளடக்கியஇக்கலைக்கண்காட்சியை
இந்தியாவின் முன்னாள் தேர்தல் ஆணையர் நவின் சாவ்லா, ஹங்கேரியதகவல் மற்றும் கலாச்சாரமையத்தில்
இவ்வெள்ளியன்று திறந்து வைத்தார். ஹங்கேரிய மையத்துடன் இணைந்து இக்கலைக்கண்காட்சிக்கு
ஏற்பாடு செய்துள்ளது இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை. 'அன்னை தெரேசா - கருணையை எடுத்துரைத்தவர்'
என்ற தலைப்பில் இடம்பெறும் இக்கண்காட்சியில் இடம்பெறும் 35 ஓவியங்களும் அன்னையின் பிறரன்புப்
பணிகளை எடுத்துரைப்பவைகளாக உள்ளன.