நம்பிக்கை ஆண்டு நமக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு அரிய வாய்ப்பு - கர்தினால் Stanislaw
Rylko
நவ.02,2012. நடைபெறும் நம்பிக்கை ஆண்டில் நமக்கு முன் நம்பிக்கைக் கதவு திறந்திருப்பது
நமக்கு வழங்கப்பட்டுள்ள மற்றுமொரு அரிய வாய்ப்பு என்று வத்திக்கான் அதிகாரி ஒருவர் கூறினார். இத்தாலியின்
ரிமினி எனும் நகரில் இவ்வியாழன் முதல் வருகிற ஞாயிறு முடிய நடைபெறும் 36வது ஆண்டுக்
கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகள் அனைவருக்கும் பொதுநிலையினருக்கான திருப்பீட
அவையின் தலைவர் கர்தினால் Stanislaw Rylko அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார். மறுமலர்ச்சி
என்பது திருஅவையின் வரலாற்றில் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் ஒரு தொடர் அம்சம், இக்கண்ணோட்டத்தில்
தற்போது நாம் கொண்டாடும் நம்பிக்கை ஆண்டும் மற்றொரு மறுமலர்ச்சி முயற்சி என்று புதிய
நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவையின் தலைவர் பேராயர் Rino Fisichella அனுப்பியுள்ள
செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இத்தாலியில் உள்ள கத்தோலிக்கர்களின் மறுமலர்ச்சிக்கென
கடந்த 40 ஆண்டுகளாக இயங்கி வரும் ஓர் அமைப்பின் 36வது ஆண்டுக் கூட்டம் ரிமினி நகரில்
இஞ்ஞாயிறு முடிய நடைபெறுகிறது.