2012-11-01 16:15:21

ப்ரெயில் எழுத்துக்களில் புதிய ஏற்பாடு - அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு சே.ச.


நவ.01,2012. அன்பு நேயர்களே, பார்வையற்றவர்கள் வாசிக்கும் ப்ரெய்ல் எழுத்தில் குஜராத் மொழியில் புதிய ஏற்பாட்டு நூலை இந்த அக்டோபர் 12ம் தேதி வெளியிட்டார் குஜராத் மாநிலத்தின் காந்திநகர் உயர்மறைமாவட்டப் பேராயர் Stanislaus Fernandes. கத்தோலிக்கத் திருஅவையில் இந்த அக்டோபர் 11ம் தேதி தொடங்கியுள்ள விசுவாச ஆண்டையொட்டி ப்ரெய்ல் எழுத்தில் இந்தப் புதிய ஏற்பாட்டு நூல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூல் வெளியாகக் காரணமாக இருந்தவர் குஜராத் மாநில இயேசு சபை அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு. குஜராத் மாநிலத்தில் ஒட்டக அன்னைமரி பங்கில் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் பணி செய்து வருபவர் அருள்தந்தை கிரிஷ் சந்தியாகு. RealAudioMP3








All the contents on this site are copyrighted ©.