2012-10-31 16:21:22

திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா


அக்.31,2012. அக்டோபர் 30 இச்செவ்வாய் மாலை, இத்தாலியின் வெனிஸ் நகரில் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள் பிறந்த நாளின் நூற்றாண்டு விழா ஓர் ஆடம்பரத் திருப்பலியுடன் கொண்டாடப்பட்டது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் 1912ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி வட இத்தாலியின் Veneto எனும் பகுதியில் பிறந்தார். 1978ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி இவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்று, 33 நாட்களுக்குப் பின், செப்டம்பர் மாதம் 28ம் தேதி இறையடி சேர்ந்தார்.
'புன்னகைத் தவழும் திருத்தந்தை' என்ற அடைமொழிக்கு உரிய இத்திருத்தந்தை 1969ம் ஆண்டு முதல் 1978ம் ஆண்டு வரை வெனிஸ் நகரின் பேராயராகப் பணியாற்றினார்.
Albino Luciani என்ற இயற்பெயர் கொண்ட இத்திருத்தந்தை பிறந்த நூற்றாண்டு விழாவின் நினைவாக, வெனிஸ் பேராயர் Francesco Moraglia தலைமையில் ஆடம்பரத் திருப்பலி இச்செவ்வாய் மாலை நிகழ்ந்தது. இத்திருப்பலியைத் தொடர்ந்து இன்னிசை நிகழ்ச்சியொன்றும் நடைபெற்றது.
திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களை அருளாளராக உயர்த்தும் முயற்சிகள் 2003ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன.








All the contents on this site are copyrighted ©.