குடிநீரைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சிக்கும் இலங்கை அரசின் திட்டத்திற்குச் சுற்றுச்சூழல்
குழு எதிர்ப்பு
அக்.31,2012. இலங்கை அரசு குடிநீர் விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு முயற்சித்து
வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். இலங்கை அரசு குடிநீர்
விநியோகத்தைத் தனியார்மயமாக்குவதற்கு விரும்புகிறது என்று, தண்ணீருக்கான மக்கள் உரிமை
இயக்கம் என்ற சுற்றுச்சூழல் குழு குற்றம் சாட்டுவதற்கு அரசு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்து
வந்தாலும், குடிநீருக்கு வரி வசூலிப்பதற்கு அரசு முயற்சித்து வருவதாக அக்குழு கூறுகிறது. தூய்மையான
பொருள்கள்மீது வரி வசூலிப்பதைப் புகுத்துவதன் மூலம், 1964ம் ஆண்டின் நீர்வள அமைப்புச்
சட்ட எண்ணில் மாற்றம் கொண்டுவருவதற்கு அரசு திட்டமிட்டு வருகின்றது என்று இந்தச் சுற்றுச்சூழல்
குழு கூறியுள்ளது. இதற்கிடையே, குடிநீருக்கும் வேளாண்மைக்குமென கிணறு அல்லது குழாய்க்
கிணறு தோண்டும்போது 7,500 ரூபாய் முதல் 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கும் திட்டத்தை நீர்வள
அமைப்பு அண்மையில் பரிந்துரைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.