கணணி வழியில் நீத்தார் நினைவு நாள்: பிலிப்பின்ஸ் ஆயர் பேரவை முயற்சி
அக்.31,2012. நீத்தார் நினைவைக் கொண்டாடும் நவம்பர் 2ம் தேதியன்று கணணி வழியில் கல்லறைகளைக்
கண்டு, அங்கு நிகழும் வழிபாடுகளில் பங்கேற்கும் வழிமுறையை பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின்
ஊடகத்துறை அலுவலகம் உருவாக்கியுள்ளது. நீத்தார் நினைவு பிலிப்பின்ஸ் நாட்டில் ஒரு
பெரும் விழாவாகக் கொண்டாடப்படுவது மரபு. பிலிப்பின்ஸ் நாட்டிலிருந்து வெளிநாடுகளில் பணி
செய்து வரும் கத்தோலிக்கர்கள் இந்த மரபுவழி விழாவில் நேரடியாகக் கலந்துகொள்ள முடியாததால்,
அவர்கள் வசதிக்காக, இத்தொழிநுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது என்று பேரவையின் ஊடகத் துறை
இயக்குனர் அருள்தந்தை Pedro Quitorio, Fides செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில்
கூறியுள்ளார். 80 இலட்சத்திற்கும் மேற்பட்ட பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் பல்வேறு நாடுகளில்
பணியாற்றி வருகின்றனர் என்றும், இவர்கள் அனைவருமே நீத்தார் நினைவு எனும் நாளை சிறப்பாகக்
கொண்டாட விழையும் கத்தோலிக்கர்கள் என்றும் அருள்தந்தை Quitorio விளக்கினார்.