அக்.30, 2012. ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவதாக தற்போதைய
ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. ஜெர்மனியில் உள்ள முதியவர்கள் குறித்து மத்திய கூட்டுப்
புள்ளியியல் துறை ஆய்வு நடத்தியதில், ஜெர்மனியில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து
கொண்டே வருவதாகவும், இந்நிலை தொடர்ந்தால் வருகிற 2050ஆம் ஆண்டில் தற்போதைய நிலையைவிட
இரண்டு மடங்காகி விடும் எனவும் தெரிய வந்துள்ளது. 2050ஆம் ஆண்டில் ஜெர்மனியில் 15
பேரில் ஒருவர் முதியவராக இருப்பர், அதாவது 47 இலட்சம் முதியவர்கள் இருப்பார்கள் எனவும்
கணிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜெர்மனியில் முதியவர்கள் நல மையங்களில் கட்டணங்கள் அதிகம்
என்பதால், இவர்கள் இஸ்பெயின், தாய்லாந்து மற்றும் அண்மை ஐரோப்பிய நாடுகளுக்கு இடம்பெயர்கின்றனர்
என்பதும் குறிப்பிடத்தக்கது.