2012-10-30 15:29:36

கவிதைக் கனவுகள் - ஊர்வலம்


மயிலின் நடுக்கத்துக்குப்
போர்வை கொடுத்த பேகனே
எங்கே போய்த் தொலைந்தாய்?
வா!

லட்சோப லட்சம் பச்சை மயில்கள்
வறுமை அடிமை வரதட்சணைக் கொடுமை
இவற்றில் நடுங்குகின்றன - என்றேன்
வேக வேகமாய்
எதிரே வந்த பேகன்
அவசர அவசரமாய்ப்
போர்வையை எடுத்துத்
தன் முகத்தைப் போர்த்துக்கொண்டான்.
எழுதியவர் – கவிஞர் மு.மேத்தா








All the contents on this site are copyrighted ©.