மயிலின் நடுக்கத்துக்குப் போர்வை கொடுத்த பேகனே எங்கே போய்த் தொலைந்தாய்? வா!
லட்சோப லட்சம் பச்சை மயில்கள் வறுமை அடிமை வரதட்சணைக் கொடுமை இவற்றில்
நடுங்குகின்றன - என்றேன் வேக வேகமாய் எதிரே வந்த பேகன் அவசர அவசரமாய்ப் போர்வையை
எடுத்துத் தன் முகத்தைப் போர்த்துக்கொண்டான். எழுதியவர் – கவிஞர் மு.மேத்தா