2012-10-29 15:31:31

திருத்தந்தையின் செபங்களுக்கு பஹாமாஸ் ஆயர் நன்றி


அக்.29,2012. பஹாமாஸ், கியூபா, ஹெய்ட்டி, ஜமெய்க்கா ஆகிய கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள மக்களுக்குத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தெரிவித்த ஆறுதலுக்கும் செபத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார் பஹாமாஸ் ஆயர் Patrick Christopher Pinder .
கடும் புயலாலும் வெள்ளத்தாலும் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள இந்நாடுகளின் மக்களுக்கு இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் தனது செபங்களையும், ஆறுதலையும், ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்த திருத்தந்தைக்குத் தான் நன்றி தெரிவிப்பதாகக் கூறினார் பஹாமாஸின் Nassau ஆயர் Pinder கரீபியன் நாடுகளில் சாண்டி புயலால் அறுபதுக்கு மேற்பட்டோர் இறந்துள்ளனர். மேலும், அப்புயல், ஐந்து கோடிக்கு மேற்பட்டோர் வாழும் அமெரிக்க ஐக்கிய நாட்டின் கிழக்குக் கரையைத் தாக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.







All the contents on this site are copyrighted ©.