மிசோராமில் புகையிலைப் பயன்பாடு நிறுத்தப்படுவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு அழைப்பு
அக்.27,2012. இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக
இருக்கும்வேளை, அம்மாநில மக்கள் புகையிலையைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ
சபைகள் உதவுமாறு, மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் கேட்டுள்ளது. ஆலயங்களும்
ஆலய வளாகங்களும் மக்கள் கூடும் இடங்களாக இருப்பதால், அவ்விடங்களில் புகைப்பிடிப்பது சட்டத்தை
மீறுவதாகும் என்று சொல்லி, புகையிலைப் பயன்பாட்டை நிறுத்துவதற்கு கிறிஸ்தவ சபைகள் உதவுமாறு
அக்கழகம் கேட்டுள்ளது. மிசோராம் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கழகம் நடத்திய கூட்டத்தில்
கத்தோலிக்கத் திருஅவை உட்பட பல்வேறு கிறிஸ்தவ சபைகள் கலந்து கொண்டன. வடகிழக்கு இந்திய
மாநிலமான மிசோராமில் ஏறக்குறைய 87 விழுக்காட்டினர் கிறிஸ்தவர்கள்.