2012-10-27 16:24:19

கவிதைக் கனவுகள் - பார்வை பெற வேண்டும்


பார்வை பெற வேண்டும் - நான்
பார்வை பெறவேண்டும் - என்
உள்ளம் உன்னொளி பெறவேண்டும்
புதுப் பார்வை பெறவேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

வாழ்வின் தடைகளைத்தாண்டியெழும்
புதுப்பார்வை பெறவேண்டும்
நாளும் பிறக்கும் உன்வழியை
காணும் பார்வை தரவேண்டும்
உன்னாலே எல்லாமே
ஆகும் நிலை வேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்

நீதி நேர்மை உணர்வுகளை நான்
பார்க்கும் வரம் வேண்டும்
உண்மை அன்பு உயர்ந்திடவே
உழைக்கும் உறுதி தரவேண்டும்
எல்லாமும் ஒன்றாகவே
வாழ வழிவேண்டும்
நான் பார்வை பெறவேண்டும்
எழுதியவர் : அருள்பணி அருள்ராஜன்








All the contents on this site are copyrighted ©.