உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால்
அக்.27,2012. உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொது ஆலோசனை அவைக்கு மும்பை கர்தினால் ஆஸ்வால்டு
கிரேசியஸ், புதிய கர்தினாலாக அறிவிக்கப்பட்டுள்ள பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio
G. TAGLE உட்பட 12 பேரும், திருத்தந்தையால் மூவரும் நியமிக்கப்ப்ட்டுள்ளனர். இவ்வெள்ளி
மாலை நடைபெற்ற இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் 21வது பொது அமர்வில் உலக ஆயர்கள் மாமன்றப்
பொதுச் செயலர் பேராயர் நிக்கொலா எத்ரோவிச் இதனை அறிவித்தார். இச்சனிக்கிழமை வாக்கெடுப்புக்கு
விடப்படவிருந்த மாமன்றத் தந்தையரின் பரிந்துரைகளின் தொகுப்பும், இந்த வெள்ளி மாலைப் பொது
அமர்வின்போது மாமன்றத் தந்தையரிடம் கொடுக்கப்பட்டது. இதில் 249 மாமன்றத் தந்தையர்
கலந்து கொண்டனர்.