இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள் புது வழிமுறைகளைத் தேடும் மாநாடு
அக்.27,2012. “அர்ப்பண வாழ்க்கையை அதிகப் பயனுள்ள விதத்தில் வாழ்வதற்குப் புது வழிமுறைகள்”
என்ற தலைப்பில் ஆந்திரா மாநிலத்தின் ஹைதராபாத்தில் இந்தியத் துறவு சபைகளின் அதிபர்கள்
இஞ்ஞாயிறன்று நான்கு நாள் மாநாட்டைத் தொடங்குகின்றனர். இதில், துறவு சபைகளின் அதிபர்கள்,
மாநிலத் தலைவியர் என 550 பேர் கலந்து கொள்கின்றனர். CRI எனப்படும் இந்தியத் துறவு
சபைகளின் அதிபர்கள் அவை, 334 துறவு சபைகளையும், அதிபர்கள், மாநிலத் தலைவியர் என 822 தலைவர்களையும்
கொண்டுள்ளது. இந்தியாவில் அருள் சகோதரர்கள், அருள்தந்தையர், அருள் சகோதரிகள் என ஒரு
இலட்சத்து 25 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் மறைப்பணியாற்றுகின்றனர். இந்தியத் துறவு சபைகளின்
அதிபர்களின் தேசிய மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகின்றது.