2012-10-26 16:30:24

சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம்


அக்.26,2012. மேலும், முஸ்லீம்களின் Eid al-Adha விழாவையொட்டி இவ்வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 6 மணிக்குச் சிரியாவில் நான்கு நாள் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
ஐ.நா. மற்றும் அரபுக் கூட்டமைப்பு பிரதிநிதி Lakhdar Brahimi முன்வைத்த பரிந்துரையின்பேரில் இந்தப் போர் நிறுத்தம் தொடங்கியுள்ளது.
இந்தப் போர் நிறுத்தம், அமைதிக்கான நடவடிக்கைகளுக்கு வழிஅமைக்கும் என்ற தனது நம்பிக்கையை வெளியிட்டார் Brahimi .
சிரியா அரசுத் தலைவர் Bashar al-Assad க்கு எதிராக ஏறக்குறைய இருபது மாதங்களாக இடம்பெற்றுவரும் கிளர்ச்சியில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். 3 இலட்சத்து 40 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் அண்டை நாடுகளுக்குச் சென்றுள்ளனர். மேலும் 25 இலட்சம் மக்களுக்கு உடனடி மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்தப் போர் நிறுத்தத்தை வரவேற்றுள்ள ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன், போரிடும் எல்லாத் தரப்புகளுமே இதனைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.