2012-10-25 16:28:09

புதிய கர்தினால் குறித்து உலகெங்கும் வாழும் சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வு


அக்.25,2012. சீரோ மலங்கரா ரீதி திருஅவைக்கு இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்று திருவள்ளா உயர்மறைமாவட்டப் பேராயர் Thomas Mar Coorilos கூறினார்.
திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று அறிவித்த ஆறு புதிய கர்தினால்களில், இந்திய சீரோ மலங்கரா ரீதி தலைவரான உயர் பேராயர் Catholicos Baselios Mar Cleemisம் ஒருவர்.
இச்செய்தியை Pattomல் உள்ள புனித மரியன்னை பேராலயத்தில் இப்புதன் மாலை அறிவித்த பேராயர் Mar Coorilos, பேராயர் Mar Cleemis அவர்களின் அயராத உழைப்பிற்கு கிடைத்த ஒரு தக்க பரிசு இது என்று கூறினார்.
53 வயதே நிரம்பிய பேராயர் Mar Cleemis, தற்போதைய கர்தினால்கள் குழுவில் மிகவும் இளையவர் என்றும், சீரோ மலங்கரா ரீதியில் முதன் முறையாக உருவாக்கப்பட்டுள்ள கர்தினால் என்றும் கூறப்படுகிறது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகெங்கும் வாழும் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான சீரோ மலங்கரா ரீதி கத்தோலிக்கர்கள் மகிழ்வுடன் இந்தச் செய்தியை வரவேற்றனர் என்று UCA செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.