2012-10-25 16:26:25

சைப்ரஸ் நாட்டுத் தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு


அக்.25,2012. இவ்வியாழன் காலை சைப்ரஸ் நாட்டுத் தலைவர் Demetris Christofias திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்து உரையாடினார்.
திருப்பீடத்திற்கும், சைப்ரஸ் நாட்டுக்கும் இடையே நிலவிவரும் நல்லுறவைக் குறித்து தான் மகிழ்வதாக இச்சந்திப்பின்போது தெரிவித்தார் திருத்தந்தை.
ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பொறுப்பினை சைப்ரஸ் நாடு தற்போது வகித்து வருவதால், ஐரோப்பிய நாடுகளில் நிலவும் பல்வேறு சவால்கள் குறித்து இச்சந்திப்பின்போது பேசப்பட்டது.
மேலும், உலக நாடுகளின் முயற்சிகளால் மத்தியகிழக்குப் பகுதியில் நிலையான அமைதி உருவாகும் வழிகளும் இச்சந்திப்பில் பேசப்பட்டன.
இச்சந்திப்பிற்குப் பின், சைப்ரஸ் அரசுத் தலைவர் Christofias, திருப்பீடச் செயலர் கர்தினால் தர்சிசியோ பெர்தோனே மற்றும் நாடுகளுடனான உறவுகள் அவையின் செயலர் பேராயர் தோமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்துப் பேசினார்.








All the contents on this site are copyrighted ©.