அக்.24,2012. வரும் 2016ஆண்டில் இந்தியாவில் 33 கோடி செல்லிடப்பேசிகள் மொபைல் போன் விற்பனையாகும்
என இத்துறையில் ஆய்வு மேற்கொண்டு வரும் கார்ட்னர் அமைப்பு தெரிவித்துள்ளது. வரும்
2013ம் ஆண்டில், செல்லிடப்பேசிகள் விற்பனை 25 கோடியே 10 லட்சத்தைத் தாண்ட உள்ளது. இது
நடப்பு 2012ம் ஆண்டு விற்பனையைக் காட்டிலும் 13.5% கூடுதலாக இருக்கும். இந்திய செல்லிடப்பேசிகள்
விற்பனைச் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. செல்லிடப்பேசிகள் தயாரித்து விற்பனை செய்வதில்,
ஏறத்தாழ 150 நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள், குறைந்த விலை
செல்லிடப்பேசிகளைத் தயார் செய்வதில் கவனம் காட்டி வருகின்றன. சீன நிறுவனங்களும் பல்வேறு
வழிகளில், பன்னாட்டு நிறுவனங்களுக்குப் போட்டியாக இயங்குகின்றன. இவற்றால், இந்திய நிறுவனங்கள்
மிகக் கஷ்டப்பட்டே தங்கள் விற்பனைச் சந்தையைத் தக்கவைப்பது பெரும் சவாலாக உள்ளது.