சீன ஆயர் Junqiu : நம்பிக்கை ஆண்டு, நற்செய்தியைத் துணிவுடன் வாழ அழைக்கிறது
அக்.23,2012. நாம் எதை நம்புகிறோமோ அதைப் போதித்து அதை வாழ்வில் நடைமுறைப்படுத்துவதே
இந்த நம்பிக்கை ஆண்டில் நமக்கு உண்மையிலேயே தேவைப்படுகின்றது என்று, சீன ஆயர் Gan Junqiu
கூறியுள்ளார். இம்மாதம் 11ம் தேதி தொடங்கியுள்ள நம்பிக்கை ஆண்டுக்கென மேய்ப்புப்பணி
அறிக்கை வெளியிட்டுள்ள Guangzhou ஆயர் Junqiu, நற்செய்தி அறிவிப்பாளருக்கு இயேசுவே முன்மாதிரிகை
என்று குறிப்பிட்டுள்ளார். உலகில் இயேசுவின் பிரசன்னத்தின் அடையாளமாகத் திருஅவை இருக்கின்றது
என்றுரைத்துள்ள சீன ஆயர் Junqiu, 16 மற்றும் 17ம் நூற்றாண்டுகளில் சீனாவில் மறைப்பணித்தளங்களை
உருவாக்கிய இத்தாலிய இயேசு சபை அருள்தந்தை Matteo Ricci, சீனக் கலாச்சாரத்தோடு ஒத்துவரும்
வகையில் நற்செய்தியை அறிவித்ததையும் விளக்கியுள்ளார்.