2012-10-23 16:17:09

சிரியா ஆயர் : அனைத்து ஆலயங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன


அக்.23,2012. சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் அலெப்போ, ஓர் ஒழுங்கற்ற மற்றும் பெருங்குழப்ப நிலையில் உள்ளது என்று அந்நகரின் கல்தேயரீதி இயேசு சபை ஆயர் Antoine Audo, இலண்டன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
குண்டுவெடிப்பு அச்சுறுத்தல்களுக்குப் பயந்து கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறிவிட்டனர், தங்களது வாழ்வாதாரங்களை இழந்துவிட்டனர், பள்ளிகளும் மருத்துவமனைகளும் பொதுநலச்சேவை மையங்களும் இயங்கவில்லை என்று ஆயர் Audo மேலும் கூறினார்.
80 விழுக்காட்டு மக்களுக்கு வேலை இல்லை, வேறு வழியில்லாமல் அவர்கள் வீடுகளில் இருக்கின்றனர், விலைவாசி உயர்வு மற்றும் ஊதியம் இல்லாததால் வறுமைநிலை மேலும் மோசமடைந்து வருகின்றது என்றும் ஆயர் கூறினார்.
சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வாழும் இரண்டாவது பெரிய நகரமான ஹோம்ஸில் எல்லா ஆலயங்களும் இழிவுபடுத்தப்பட்டுள்ளன என்றுரைத்த ஆயர் Audo, அச்சுறுத்தலினால் விசுவாசிகள் தங்களது வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்தார்.







All the contents on this site are copyrighted ©.