கென்யா : மதம் பாராது நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுக்கத் திருஅவைத் தலைவர் ஒருவர்
வலியுறுத்தல்
அக்.23,2012. செல்வம், இனம், மதம் ஆகியவற்றைக் கடந்து நேர்மையான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதற்குத்
தேர்தல் ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கின்றது என்று கென்யப் பல்சமய குருக்கள் பணிக்குழுத்
தலைவர் அருள்பணி Wilybard Lagho கூறினார். அரசியல் தலைவர்களைத் தெரிந்தெடுப்பது, வாக்காளர்களின்
சொந்த ஒருங்கிணைந்த ஆளுமைக்கு வைக்கப்படும் தேர்வு எனவும் அருள்பணி Lagho கூறினார். அண்மையில்
Mombasaவில் இடம்பெற்ற இனக் கலவரங்களைக் குறிப்பிட்டுப் பேசிய அவர், கிறிஸ்தவர்களும்
முஸ்லீம்களும் உறவுள்ள அண்டைவீட்டாராக, அமைதியான முறையில் நல்லிணக்கத்துடன் வாழுமாறும்
கேட்டுக் கொண்டார்