Home Archivio
2012-10-22 13:55:55
கவிதைக் கனவுகள் – ஆசைப்படு... (எழுதியவர் இராகவன் சரவணன், பெங்களூர்)
உலகில் உருவாக்கப்பட்ட
அத்துணைவிஷயங்களுக்கும்
'ஆசைப்படுதல்' ஒன்று தான்
மூலிகை!
ஆசை மட்டுமே பட்டுக்
கொண்டிருந்தால் பூசை நடக்காது!
சோம்பல் என்னும் கற்பூரம் கொளுத்தி
முயற்சி என்னும் ஊதுபத்தி ஏற்றி
நம்பிக்கை என்னும் விளக்கு வைத்து
உழைப்பு என்னும் பூசை நடத்து
பூசையின் புனிதம் காக்கப்பட
அவ்வப்போது ஆசை என்னும்
எண்ணெய் ஊற்று!
அதுதான் உன்னை அடுத்தடுத்த
குறிக்கோள்களை அடைய வைக்கும்
ஆனந்த ஊற்று!
All the contents on this site are copyrighted ©.