அக்.20,2012. நம்பிக்கை ஆண்டு, மங்கோலியாவின் இளம் திருஅவைக்குத் திருமறைக்கல்வியைப்
பகிர்ந்து கொள்வதற்கு ஒரு சவாலாகவும், ஓர் அழைப்பாகவும் அமைந்துள்ளது என்று தென்கொரியத்
திருப்பீடத் தூதரும் மங்கோலியாவின் Ulaanbaatar ஆயருமான Wenceslao Padilla கூறினார். மங்கோலியத்
தலைநகரான Ulaanbaatarவில் வேதியர்களுக்கு ஒருமாத மறைக்கல்விப் பயிற்சி வகுப்பை ஆரம்பித்து
வைத்த ஆயர் Padilla, அந்நாட்டுக்கு மறைக்கல்வி ஆசிரியர்கள் அதிகம் தேவைப்படுகிறார்கள்
என்று கூறினார். மங்கோலியாவின் Ulaanbaatarவில் 1992ம் ஆண்டில் முதல் மறைப்பணித்தளம்
தொடங்கப்பட்டது. மரியின் தூய இதய சபையைச் சார்ந்த இரண்டு அருள்சகோதரர்களுடன் அங்குச்
சென்று மறைப்பணியை ஆரம்பித்தார் ஆயர் Padilla. தற்போது அந்நாட்டில் 18 நாடுகளைச் சேர்ந்த
64 மறைபோதகர்கள் பணியாற்றுகின்றனர். 415 கத்தோலிக்கர்கள் உள்ளனர். கிழக்கு மற்றும்
மத்திய ஆசியாவிலுள்ள மங்கோலியாவின் தலைநகர் Ulaanbaatarவில் அந்நாட்டின் 45 விழுக்காட்டு
மக்கள் வாழ்கின்றனர்.