2012-10-19 15:56:28

கவிதைக் கனவுகள்....... நேசம் எழுதியவர் :விக்ரமாதித்யன்


அதிசயமாக இருக்கிறது
இன்னும்
அப்பாக்கள்
பையன்களைப்பற்றிக்
கவலைப்படுகிறார்கள்

ஆச்சரியமாக இருக்கிறது
இன்றும் அம்மாக்கள் பிள்ளைகளுக்கு
கூழ்வற்றல் போட்டுக்
கொடுத்தனுப்புகிறார்கள்

நம்பமுடியவில்லை
இன்றும்
வாசகர்கள்
கவிஞனைத் தேடிவந்து பார்த்துப் பேசுகிறார்கள்

அபூர்வமாக இருக்கிறது
இன்னும் வாடியமுகம் செருப்பில்லாத பாதங்களை
வகைக்கும் மனுஷர்கள் இருக்கிறார்கள்
மழைபொழிவதும் மண்ணில் விளைவதும் மக்களுக்கே







All the contents on this site are copyrighted ©.