இந்திய இறையியலாளர் கழகத்தின் 35வது ஆண்டுக் கூட்டம்
அக்.19,2012. ITA என்ற இந்திய இறையியலாளர் கழகத்தின் 35வது ஆண்டுக் கூட்டம் பஞ்சாபின்
ஜலந்தர் மூவொரு கடவுள் குருத்துவ கல்லூரியில் இவ்வெள்ளிக்கிழமையன்று தொடங்கியுள்ளது. “பொதுவாழ்வில்
ஊழல் : ஓர் இறையியல் பதில்” என்ற தலைப்பில் நடைபெறும் 5 நாள் கூட்டத்தில் ஏறக்குறைய நூறு
இறையியலாளர்கள் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதிநிதிகள்,
இந்தத் தலைப்பை மையமாக வைத்து, விவிலிய, கலாச்சார மற்றும் இறையியல் கண்ணோட்டத்தில் உரையாற்றுவார்கள்
என்று ITA கழகத்தின் தலைவர் அருள்பணி Antony Kalliath கூறினார். 1976ம் ஆண்டு ஹைதராபாத்தில்
உருவாக்கப்பட்ட இந்திய இறையிலாளர் கழகத்தில் 150க்கும் மேற்பட்ட இந்திய இறையியலாளர்கள்
உறுப்பினர்களாக உள்ளனர்.