2012-10-19 15:37:45

ஆயர்கள் மாமன்றத்தில் மியான்மார் ஆயர் : தென்கிழக்கு ஆசியாவில், நற்செய்தி அறிவிப்புப்பணி கடினமாக இருக்கின்றது


அக்.19,2012. மியான்மாரின் Mandalay உயர்மறைமாவட்ட வாரிசு ஆயர் Nicholas MANG THANG இந்த ஆயர்கள் மாமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உரையில், ஆசியாவில், குறிப்பாக, புத்தமதத்தினர் அதிகமாக இருக்கும் தென்கிழக்கு ஆசியாவில், நற்செய்தி அறிவிப்புப்பணி கடினமாக இருக்கின்றது மற்றும் மதமாற்றமும் மிக மெதுவாக இடம்பெற்று வருகின்றது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன என்று கூறியுள்ள ஆயர் THANG, நாடு, கலாச்சாரம், மதம் ஆகிய மூன்றும் ஒன்றாக நோக்கப்படுவது ஒரு காரணம் எனவும், சிலுவைமரணம், வன்முறை மரணம் ஆகிய இரண்டையும் எதிர்கொண்ட ஒருவர் மீட்பராகக் இருக்க முடியாது, மேலும், இவர் நற்செய்தியைக் கொண்டிருப்பவர் அல்லர், இத்தகையவர் நல்ல தூய மனிதராக இருக்க முடியாது என்ற கருத்து மற்றொரு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மறுபிறப்பில் நம்பிக்கை கொண்டுள்ள புத்தமத மரபு இதற்குக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ள மியான்மார் ஆயர் THANG, கடவுள் இரக்கமுள்ள தந்தை என்ற கத்தோலிக்க கோட்பாட்டில் புதிய ஒளியைச் சிந்தும் புனித குழந்தை தெரேசாவின் ஆன்மீக இறையியலை மையமாகக் கொண்ட மறைபரப்புப்பணி இடம்பெறுமாறும் கேட்டுக் கொண்டார்.







All the contents on this site are copyrighted ©.