2012-10-18 15:30:51

ஆயர்கள் மாமன்றத்தில் கர்தினால் Wuerl : விசுவாசத்தை மீண்டும் புத்துயிர் பெறச் செய்யும் வழிகளை ஆராய்வதற்குப் பரிந்துரை


அக்.18,2012. விசுவாசத்தை மீண்டும் புத்துயிர் பெறச்செய்வது மற்றும் திருஅவைக்கு மக்களை மீண்டும் அழைத்து வருவது பற்றிய வழிகள் குறித்து வரும் நாள்களில் கலந்துரையாடுவதற்குப் பரிந்துரைக்கும் விரிவான அறிக்கையை உலக ஆயர்கள் மாமன்றத்தில் இப்புதன் மாலைப் பொது அமர்வில் சமர்ப்பித்தார் கர்தினால் Donald Wuerl.
13வது உலக ஆயர்கள் மாமன்றத்தில், மாமன்றத் தந்தையர் இதுவரை வழங்கிய கருத்துப்பரிமாற்றங்களை வைத்து இனிவரும் நாள்களில் கலந்துரையாடல்களை நடத்துவதற்கென 14 கேள்விகள் அடங்கிய அறிக்கையை இம்மாமன்றத்தின் 11வது நாளில் சமர்ப்பித்தார் கர்தினால் Wuerl.
திருமுழுக்குப்பெற்ற விசுவாசிகள் நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு எவ்விதத்தில் பொறுப்பாளர்களாக இருக்கிறார்கள் என்பது பெரிய அளவில் உணர்த்தப்படுவதற்குத் திருஅவை செய்யவேண்டியதென்ன?, திருஅவையில் வேதியர்களுக்கு ஒரு நிரந்தரப்பணியைக் கொடுப்பதற்கான காலம் இதுவா? விசுவாசத்தின் சாரம் மற்றும் நற்செய்தி குறித்த அறிவு குறைந்துள்ள இக்காலத்தில், இவை பற்றி, குறிப்பாக இளையோர் மத்தியில் போதிப்பதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள் என்ன? போன்றவை அவ்வறிக்கையில் சொல்லப்பட்டுள்ளன.
வாஷிங்டன் பேராயர் கர்தினால் Wuerl, இந்த உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொகுப்பாளர் ஆவார்.








All the contents on this site are copyrighted ©.