இலங்கை பிரச்சினைக்கு விரைவாக அரசியல் தீர்வு காண வேண்டும் – பான் கீ
மூன் மீண்டும் வலியுறுத்தல்
அக்.17,2012. இலங்கையில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போருக்கு
அடிப்படைக் காரணமாக விளங்கிய பிரச்சினைக்கு, விரைவாக அரசியல் தீர்வு காணவேண்டும் என்று
ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் மனித
உரிமை விவகாரங்களுக்கென அரசுத் தலைவரின் சிறப்புத் தூதராகப் பணியாற்றும் அமைச்சர் மகிந்த
சமரசிங்க (Mahinda Samarasinghe), இச்செவ்வாயன்று ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூனை நியுயார்க்கில்
சந்தித்தபோது, பான் கி மூன் இவ்விதம் வலியுறுத்தியுள்ளார். இலங்கையில் வாழும் அனைவருக்கும்
நீதியையும், சமத்துவத்தையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்த சுதந்திரமான நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும் என்று பான் கி மூன் வலியுறுத்திக் கூறியுள்ளார்.