2012-10-16 16:31:41

போருக்குப் பின்னர் இலங்கையில் போதைப்பொருள் விநியோகம் அதிகரிப்பு


அக்.15,2012. இலங்கையில் போர் நிறைவடைந்த மூன்று ஆண்டுகளில் சட்ட விரோத போதைப்பொருள் விநியோக நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டின் ஜுன் மாதம் வரையில் மட்டும், இவ்வாறு போதைப் பொருட்களைக் கடத்த முயன்ற 19 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த இரண்டு ஆண்டுகளில் 40 ஆயிரம் பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
போர் நிறைவடைந்த பின்னர், போதைப்பொருள் விநியோகம் அதிகரித்துள்ளதாகக் கூறும் இத்திணைக்களம், இந்த ஆண்டில் மட்டும் 77 இலட்சம் டாலர்கள் மதிப்புடைய போதைப் பொருட்கள் பல்வேறு சமயங்களில் மீட்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது







All the contents on this site are copyrighted ©.