2012-10-16 16:43:54

இத்தாலிய ஆயர் ஒருவரை வெளியேற்றியுள்ளது Chad அரசு


அக்.16,2012. மத்திய ஆப்ரிக்க நாடான Chadல் எண்ணெய்யில் கிடைக்கும் வருமானம் தவறாக நிர்வகிக்கப்படுவதாகக் குறைகூறிய இத்தாலிய கத்தோலிக்க ஆயர் ஒருவரை நாட்டைவிட்டு வெளியேற்றியுள்ளது அந்நாட்டு அரசு.
Chad நாட்டில் 36 ஆண்டுகள் மறைப்பணியாளராகப் பணியாற்றிய கொம்போனி மறைபோதகச் சபையைச் சார்ந்த 67 வயதாகும் இத்தாலிய ஆயர் Michele Russo இஞ்ஞாயிறன்று இத்தாலி திரும்பியுள்ளார்.
Chad நாட்டில் எண்ணெய்வளம் மிகுந்த Doba தென் பகுதியில் 23 ஆண்டுகள் ஆயராகப் பணியாற்றியுள்ள ஆயர் Russo, அந்நாட்டின் எண்ணெய் வளத்திலிருந்து கிடைக்கும் செல்வத்தில் ஏழைகளுக்கு அதிகப் பணம் கிடைக்க வேண்டுமென்று போராடி வந்தார்.
இதற்கிடையே, ஆயர் Russoவின் கூற்றுக்களை அந்நாட்டு வானொலி நிலையம் தவறாக மொழிபெயர்த்துவிட்டது எனவும், இவ்விவகாரத்தில் சாட் அரசு உரையாடலுக்குத் தயாராக இருப்பதாகவும் தலத்திருஅவை வட்டாரங்கள் கூறுகின்றன.
மத்திய ஆப்ரிக்க நாடான Chad, முஸ்லீம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டுள்ள நாடாகும்.







All the contents on this site are copyrighted ©.