செபவழிபாட்டில் ஈடுபட்ட ஏழு கிறிஸ்தவர்கள் இரானில் கைது
அக்.15,2012. இரானின் Shiraz என்ற நகரில் கூட்டுச்செபத்தில் ஈடுபட்டிருந்த குழுவிலிருந்து
7 கிறிஸ்தவர்களைக் கைது செய்துள்ளது அந்நாட்டுப் பாதுகாப்புத்துறை. செபவழிபாடு நடந்துகொண்டிருந்த
கிறிஸ்தவ வீடு ஒன்றிற்குள் புகுந்த இரான் பாதுகாப்புத்துறை, வயதானவர்களை எச்சரித்து அனுப்பிவிட்டு
ஏனைய ஏழுபேரை கைது செய்து உளவுத்துறையின் தடுப்புக்காவல் மையத்தில் வைத்துள்ளது. அண்மைக்
காலங்களில் கிறிஸ்தவர்கள் இரானில் கைதுச்செய்யப்படுவது அதிகரித்து வருவதாகச் செய்தி நிறுவனங்கள்
குற்றஞ்சாட்டுகின்றன.