ஜெர்மனியில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் பத்தாயிரம் உள்ளன
அக்.13,2012. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட குண்டுகளில் இன்னும் பத்தாயிரம் குண்டுகள்
இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன இரண்டாம் உலகப்போரின்போது வீசப்பட்ட குண்டு ஒன்று,
ஜெர்மனியின் Potsdam என்ற நகரில் உள்ள ஒரு வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டு அதைச் செயலிழக்கச்
செய்துள்ளனர் வெடிகுண்டு நிபுணர்கள். இரண்டாம் உலகப்போர் முடிந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள்
ஆகிவிட்ட போதிலும், இவ்வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள 250 கிலோகிராம் எடையுள்ள இந்தக்
குண்டு, வெடிக்கும் தன்மையுடன் இருந்ததைக் கண்டறிந்துள்ளனர் நிபுணர்கள். இன்றும்கூட
ஜெர்மனியின் பல பகுதிகளில் நிலத்துக்கடியில் ஏறத்தாழ பத்தாயிரம் வெடிக்காத குண்டுகள்
புதையுண்டு கிடப்பதாக வெடிகுண்டு அகற்றும் பிரிவினரின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.