2012-10-13 16:12:51

ஐ.நா. அதிகாரிகள் : இயற்கைப் பேரிடர்கள் குறைப்பில் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் முக்கிய பங்கு


அக்.13,2012. உலகை அச்சுறுத்தும் இயற்கைப் பேரிடர்களின் ஆபத்துக்களைக் குறைப்பதற்கும், அப்பேரிடர்களின் கடும் விளைவுகளை எதிர்கொள்வதற்கும் பெண்களும் சிறுமிகளும் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்று ஐ.நா.அதிகாரிகள் கூறுகின்றனர்.
அக்டோபர் 13, இச்சனிக்கிழமையன்று அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன், இநதப் பேரிடர் குறைப்பு நடவடிக்கைகளில் குடும்பங்களிலும் சமூகங்களிலும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் இருக்கின்ற முக்கிய பங்கைச் சுட்டிக்காட்டியுள்ளார்.
இயற்கைப் பேரிடர்களால் ஒவ்வோர் ஆண்டும் ஏறக்குறைய இருபது கோடி இளையோர் பாதிக்கப்படுகின்றனர் என்றும், இப்பேரிடர்களில் ஆயிரக்கணக்கானோர் இறக்கின்றனர் மற்றும் காயமடைகின்றனர் என்றும் ஐ.நா.பொதுச்செயலரின் செய்தி கூறுகிறது.
இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்ளும் விதம் குறித்து பங்களாதேஷில் பெண்களும், தென்னாப்ரிக்காவில் சிறுமிகளும் விழிப்புணர்வுக் கல்வியில் ஈடுபட்டுள்ளனர் எனவும் ஐ.நா.பொதுச்செயலர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்துலக இயற்கைப் பேரிடர்கள் குறைப்பு தினம் அக்டோபர் 13ம் தேதி கடைப்பிடிக்கப்பட்ட வேண்டுமென ஐ.நா.பொது அவை 2009ம் ஆண்டில் தீர்மானித்தது.







All the contents on this site are copyrighted ©.