அக்.12,2012. இவ்வியாழனன்று தொடங்கிய விசுவாச ஆண்டை இந்தியா, மியான்மார், வியட்நாம் என
உலகின் அனைத்துத் தலத்திருஅவைகளும் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளன. புதுடெல்லி இயேசுவின்
திருஇதயப் பேராலயத்தில் கொடியேற்றித் திருப்பலி நிகழ்த்தி இந்த விசுவாச ஆண்டைத் தொடங்கி
வைத்த டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்செஸ்ஸாவோ, இந்த ஆண்டில் இன்னும் நல்ல கிறிஸ்தவர்களாக
வாழ்ந்து நமது விசுவாசத்தை மற்றவரோடு பகிர்ந்து கொள்வோம் எனக் கூறினார். இதேபோல் இந்தியாவின்
பல நகரங்களில் இந்த விசுவாச ஆண்டு ஆடம்பரமாகத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும்,
மியான்மாரில் இந்த விசுவாச ஆண்டைத் தொடங்கி வைத்த யான்கூன் பேராயர் சார்லஸ் மௌங் போ,
குடும்பங்களில் விவிலியச் செபங்களுக்கும் இளையோர்க்கு கல்வி வழங்குவதற்கும் முக்கிய கவனம்
செலுத்தப்படும் என்று கூறினார். இந்த விசுவாச ஆண்டில் இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்
தீர்மானங்கள் நடைமுறைப்படுத்தவதற்கு வியட்நாம் தலத்திருஅவை கவனம் செலுத்தும் என்று அந்நாட்டு
ஆயர் பேரவை கூறியது.